வழக்கம் போல வாய் வழியாக உணவுகளை உட்கொள்கிறார் சசிகலா- விக்டோரியா மருத்துவமனை

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு, பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் வி.கே. சசிகலாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சசிகலா உடல்நிலை குறித்த அறிக்கையை விக்டோரியா மருத்துவமனை இன்று காலை வெளியிட்டுள்ளது. அதில் சசிகலாவுக்கு கொரனா வைரஸ் தொடர்பான அறிகுறிகள் குறைந்திருப்பதாகவும், மேலும் அவர் சுய நினைவோடு, தெளிவாக இருக்கிறார் எனவும் குறிப்பிட்டிருக்கிறது.

சசிகலா நிலையாகவும், வழக்கம் போல வாய் வழியாக உணவுகளை உட்கொள்வதாகவும், மருத்துவமனை வழங்கும் சிகிச்சைக்கு அவர் ஒத்துழைப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இன்னும் சசிகலாவுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது எனவும் விக்டோரியா மருத்துவமனையின் அறிக்கை கூறுகிறது.