Sasikala: பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராகும் சசிகலா

sasikala-appear-bangalore-court-today
பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராகும் சசிகலா

Sasikala: சொத்துக்குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த போது சசிகலா, இளவரசிக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க வேண்டி அங்கிருந்த அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த புகாரில், அவர்கள் இருவரும் இன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். தற்போது அவர்கள் 3 பேரும் விடுதலையாகி விட்டனர். இதற்கிடையில், சிறைவாசம் அனுபவித்தபோது சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க பரப்பனஅக்ரஹாரா சிறை அதிகாரிகள் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Sasikala: பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராகும் சசிகலா

இதுகுறித்து பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் விசாரணையை நடத்தாமலும், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமலும் போலீசார் தாமதம் செய்து வருவதால், இவ்வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னையை சேர்ந்த கீதா என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இதில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி கடந்த ஜனவரி மாதம் 7-ம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு படை போலீசார், ரூ.2 கோடி லஞ்ச வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தார்கள்.

மேலும் பரப்பன அக்ரஹாரா சிறை சூப்பிரண்டாக இருந்த சோமசேகர், டாக்டர் அனிதா, அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ் மாகனூர் ஆகிய 4 பேர் மீது விசாரணை நடத்த அரசு அனுமதி வழங்கிய நிலையில், ரூ.2 கோடி லஞ்ச வழக்கில் குற்றவாளிகளாக சோமசேகர், டாக்டர் அனிதா, அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ் மாகனூர், சசிகலா, இளவரசி உள்பட 7 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இப்படியாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமி நாராயண் பட் முன்னிலையில் ரூ.2 கோடி லஞ்ச வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: Sony Music: ரஷியாவில் சோனி மியூசிக் நிறுவனத்தின் சேவைகள் நிறுத்தம்

அதன்படி, நீதிபதி லட்சுமி நாராயண் பட் முன்னிலையில் கடந்த மாதம் 11ம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சசிகலா, இளவரசி உள்பட 7 பேரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் எனக்கூறி உத்தரவு பிறப்பித்த நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை மார்ச் 11 (இன்று) ஒத்துக்கிவைத்தார்.

இதையடுத்து, சசிகலா உள்ளிட்டவர்களுக்கு சம்மன் வழங்கிய நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டாக்டர் அனிதா, தன் மீது விசாரணை நடத்த கர்நாடக அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் டாக்டர் அனிதாவிடம் விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்துள்ளது.

இதையடுத்து சசிகலா உள்ளிட்ட 6 பேருக்கும் இன்று காலை 11 மணிக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர். இதற்காக சசிகலா, இளவரசி ஆகியோர் இன்று அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களுர் விமான நிலையம் வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் 10.30 மணிக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு வருகிறார்.

sasikala appear bangalore court today

இதையும் படிங்க: UP Election Result 2022: உ.பி.யில் 255 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது பா.ஜ.க.