சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடாந்திர யாத்திரை நடந்து வரும் நிலையில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு (டிடிபி) வளாகத்தில் உள்ள மின்னணு ஹூண்டி சேகரிப்பில் பக்தர்கள் ‘இ-கணிக்கா’ வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
முந்தைய ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் டிடிபியின் அதிகாரப்பூர்வ வங்கியாளர்களான தனலட்சுமி வங்கியுடன் இணைந்து டிஜிட்டல் பேமெண்ட் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.sabarimal digital payment
சன்னிதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 22 இடங்களில் கியூஆர் கோடு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதோடு பக்தர்கள் 9495999919 என்ற மொபைல் எண் மூலம் ‘கூகுள் பே’ செயலி வழியாக காணிக்கை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்ட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி அப்பம், அரவணை உள்பட பிரசாதங்களுக்கும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.