ஒரு வாரம் ஊதியத்துடன் கூடிய விடுப்பு

ரஷ்யாவில், கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும், வரும் 30 ஆம் தேதி முதல், நவம்பர் மாதம் 7 ஆம் தேதி வரை, அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு வாரத்திற்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளித்து அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்து உள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வரும் 30 ஆம் தேதி முதல், நவம்பர் மாதம் 7 ஆம் தேதி வரை, சுமார் ஒரு வாரத்திற்கு, நாட்டில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது. இதை காலக் கட்டத்தை பயன்படுத்தி, இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனாவுக்கு பலியாவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது அந்நாட்டு மக்களை அச்சமடைய செய்துள்ளது. ரஷ்யாவில், கடந்த 24 மணி நேரத்தில், 34 ஆயிரத்து 74 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,028 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே இது தான் அதிக உயிரிழப்பு ஆகும்.வெளிநாட்டு பயணிகளுக்கு இது கட்டாயம் – மத்திய அரசு அதிரடி!இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வரும் 30 ஆம் தேதி முதல், நவம்பர் மாதம் 7 ஆம் தேதி வரை, சுமார் ஒரு வாரத்திற்கு, நாட்டில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது. இதை காலக் கட்டத்தை பயன்படுத்தி, இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.தமிழ்நாட்டில் மத வெறுப்பை உருவாக்க நினைக்கிறது பாஜக; தயாநிதிமாறன் சாடல்உங்களின் நலனுக்காகவும், உங்களை அதிகம் விரும்புபவர்களின் நலனுக்காகவும் முடிந்தவரை விரைவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி தொடர்பான எந்த வதந்திகளையும் தயவு செய்து நம்ப வேண்டாம்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் உயிரிழப்பை நிச்சயம் தடுக்க முடியும். முகக்கவசம், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.ரஷ்யாவில் உள்ள ஒட்டு மொத்த மக்கள் தொகையில், சுமார் 32 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.