கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு அறிவித்துவருகிறது.மேலும் கொரோனா காலத்தில் தமிழக அரசு திறம்பட செயல்பட்டுவருகிறது.
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியது,விரைவில், குடும்பத் தலைவிகளுக்கு, 1000 ரூபாய் வழங்கப்படும். திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். குடும்பத் தலைவிகளுக்கு, 1000 ரூபாய் வழங்குவது குறித்து முதலமைச்சர் முறைப்படி அறிவிப்பார் என்றார்.
மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக அறிவித்து வருகிறார்.திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !