ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி..!

மஹாராஷ்டிர மாநிலத்தில், ரயிலில் இருந்து கீழே இறங்கும் போது தவறி விழுந்த கர்ப்பிணி ஒருவரை, ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸ் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மஹாராஷ்டிர மாநிலத்தில், கல்யாண் ரயில் நிலையம் பிரதான ரயில் நிலையமாக உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்களுக்கு செல்ல ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் எப்போதும் அந்த ரயில் நிலையம் பரபரப்பாக காணப்படும்.

மஹாராஷ்டிர மாநிலத்தில், கல்யாண் ரயில் நிலையம் பிரதான ரயில் நிலையமாக உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்களுக்கு செல்ல ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் எப்போதும் அந்த ரயில் நிலையம் பரபரப்பாக காணப்படும்.

அந்த நேரத்தில் அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸ் ஒருவர், விரைந்து சென்று கர்ப்பிணிப் பெண்ணை கீழே விழாமல் காப்பாற்றினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: மக்களைத் தேடி பல் மருத்துவ சேவை!