முகத்தை பளபளக்க செய்யும் அரிசி தண்ணீர் !

பொதுவாக பெண்களுக்கு தங்களது முகம் அழகாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.மேலும் வீட்டில் இருக்கும் பொருட்கள் கொண்டே நம் சருமத்தை அழகாக மாற்றலாம்.

அரிசியை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து விடவும்.இந்த அரிசி ஊறிய தண்ணீர் சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் நல்லது.இந்த தண்ணீரை முகத்திற்கு பயன்படுத்தினால் முகம் மிருதுவாக மாறும்.

இதை கொண்டு நம் முகத்திற்கு பேக் போடலாம்.இதை எவ்வாறு செய்வதென்று பார்ப்போம்.முதலில் இதற்கு தேவையானது ஒரு 4 ஸ்பூன் அரிசியை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

ஒரு ஸ்பூன் அரிசி மாவு அல்லது சோள மாவு எடுத்துக்கொள்ளவும் இதில் 4 ஸ்பூன் அரிசி ஊறிய தண்ணீரை சேர்க்கவும் ,பிறகு 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் பேக் போடவேண்டும்.20 நிமிடம் கழித்து கழுவவேண்டும்.இது நம் சருமத்தை இறுக்கமாக மாற்றும்.மேலும் சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை தடுக்கும்.

இந்த பேக் ஐ கழுத்து பகுதி,முட்டி பகுதி போன்றவற்றில் பயன்படுத்தலாம்.மேலும் முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் கூட பயன்படுத்தலாம்.