நடிகர் விவேக் மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் காரணம் இருக்குமா..விசாரணைக்கு உத்தரவு !

சின்னக்கலைவாணன் என்று அழைக்கப்படுபவர் நகைச்சுவை நடிகர் விவேக்.தனது நகைச்சுவையில் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை பதிவிடுவார்.மேலும் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மீது தனி அன்பு கொண்டவர்.

நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார்அவருடைய இறப்பு அனைவர்க்கும் அதிர்ச்சியாக இருந்தது.

விவேக் மரணம் அடைவதற்கு ஒரு நாள் முன்னர்தான் அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.மேலும் அவர் மக்களின் விழிப்புணர்வுக்காக தடுப்பூசி போட்ட பின் பேட்டியளித்தார்.

அடுத்தநாள் அவர் இறந்தது மக்களுக்கு ஒரு வித சந்தேகத்தை உருவாக்கியது.இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் தான் விவேக் மரணமடைந்தார் என விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்

இது குறித்து விசாரணை செய்ய தற்போது தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவை ஏற்றுள்ளது .இதன் முடிவு என்ன வரும் என்பதில் மக்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.