காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா – கேரளா !

இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் 5 மாநிலங்களுள் ஒன்றான கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான வயநாட்டில் காங்கிரஸ் கட்சியின் 4 முக்கிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர். இது ராகுல் காந்தி உட்பட காங்கிரஸாருக்கு அதிர்ச்சியை தந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக என்ன என்று தெரிந்துகொள்வதற்காக மூத்த தலைவர் கே.சுதாகரன் தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று வயநாடு கட்சி அலுவலகத்திற்கு விரைந்துள்ளனர்.அடுத்தடுத்து 4 முக்கியத் தலைவர்கள் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்தது கட்சியின் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.