இந்தோனீசியாவில் வெள்ள நீர் ரத்தச் சிவப்பு நிறத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது..!

இந்தோனீசியாவில் இருக்கும் ஒரு கிராமத்தில், ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் வெள்ளம் புகுந்துவிட்டதால் வெள்ள நீர் ரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

இந்தோனீசியாவில் அடிக்கடி மழை வெள்ளம் ஏற்படுவது என்பது இயல்பான ஒன்று. இந்தோனீசியாவில் சமீபத்தில்தான் ஒரு விமான விபத்து நடந்தது. அதனைத் தொடர்ந்து மழை வெள்ளம், எரிமலை வெடிப்பு என பல்வேறு மோசமான சம்பவங்கள் நடந்தன.

இப்போது மீண்டும் மழை பொழிந்து வெள்ள நீர் ரத்தச் சிவப்பு நிறத்தில் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு இருக்கிறது.