வேதாரண்யத்தில் ஆயத்த ஆடை பூங்கா!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் ஆயத்த ஆடை பூங்கா தொழில் நிறுவனங்களை தொடங்கவுள்ளதாக கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

36 ஏக்கர் பரப்பளவில் 100 கோடி ரூபாய் செலவில் திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வருகின்ற 29ஆம் தேதி திருப்பூர் தொழில் துறையினர் அணி சார்பாக தையல் பயிற்சி வேதாரண்யத்தில் தொடங்க இருக்கிறது. முதற்கட்டமாக 36 தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.