IPL 2022: சிஎஸ்கேவுக்கு புது கேப்டன்..!

CSK new captain
சிஎஸ்கேவுக்கு புது கேப்டன்

CSK: அடுத்தாண்டு முதல் கூடுதலாக இரண்டு அணிகள் இணைக்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள் வரை ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இதற்குமுன், வரும் பிப்ரவரி மாத முதல் வாரத்தில் மெகா ஏலமும் நடைபெறவுள்ளது. இதனால், 8 அணிகளும் விதிமுறைக்கு உட்பட்டு 4 வீரர்கள் வரை மட்டுமே தக்கவைக்க வேண்டும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவீந்திர ஜடேஜா (16 கோடி), மகேந்திரசிங் தோனி (12 கோடி), மொயின் அலி (8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (6 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது. சுரேஷ் ரெய்னா, ஃபாஃப் டூ பிளஸியை விடுவித்துள்ளது.

இந்நிலையில் அடுத்த தலைமுறைக்கு வழிவிடும் நோக்கிலும், அணியின் எதிர்கால நலன் கருதியும் மகேந்திரசிங் தோனி, தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்குப் பதிலாக முதன்மையாக தக்கவைக்கப்பட்டுள்ள ரவீந்திர ஜடேஜா கேப்டனாக தேர்வாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தோனி ஆலோசகராகச் செயல்பட்டு, களத்தில் கேப்டனுக்கு உக்திகளை வகுத்துக்கொடுப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த 10 வருடங்களுக்கு தேவையான அணியை கட்டமைக்க உள்ளதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெகா ஏலத்தின்போது இளம் வீரர்களுக்குதான் முன்னுரிமை கொடுக்கும் என கூறப்படுகிறது.

குறிப்பாக தீபக் சஹார், ஷர்தூல் தாகூர் போன்ற அணிக்கு விளையாடிய வீரர்களை வாங்க கோடிகளை கொட்ட தயாராகவும் இருப்பதாகத் தெரிகிறது.

அடுத்த 10 வருடங்களுக்கு தேவையான அணியை கட்டமைக்க உள்ளதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெகா ஏலத்தின்போது இளம் வீரர்களுக்குதான் முன்னுரிமை கொடுக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக தீபக் சஹார், ஷர்தூல் தாகூர் போன்ற அணிக்கு விளையாடிய வீரர்களை வாங்க கோடிகளை கொட்ட தயாராகவும் இருப்பதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: Virat Kohli: கேப்டன் பொறுப்பிலிருந்து விராத் கோஹ்லி விலகல்