மத்திய கல்வித்துறை அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி !

மத்திய கல்வித்துறை அமைச்சரான ரமேஷ் பொக்கிரியாலுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கரோனா தொற்று ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்பு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில் அவருக்கு மீண்டும் கரோனா அறிகுறிகள் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தனது ட்விட்டர் பக்கத்தில்,இன்று எனக்கு கரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்திருக்கிறது.எனது மருத்துவர்களின் ஆலோசனையின்படி நான் மருந்து மற்றும் சிகிச்சையை எடுத்து வருகிறேன். சமீபத்தில் எனது தொடர்புக்கு வந்த அனைவரையும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று நிஷாங்க் ட்வீட் செய்துள்ளார்.