மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று ரஜினிகாந்த் சந்திக்கிறார்

நடிகர் ரஜினிகாந்த் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட இருக்கும் நிலையில் நேற்று மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் ரஜினிகாந்துடன் போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். அரசியல் கட்சியை தொடங்கி, அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்தார்.

இந்நிலையில் நேற்று மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் ரஜினிகாந்துடன் போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த இந்த ஆலோசனை குறித்தும், தன்னுடைய அரசியல் முடிவு தொடர்பான அறிவிப்பு குறித்தும் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய மாவட்ட நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் இருந்து இன்று சென்னைக்கு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ரஜினி நாளை ரசிகர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது