நடிகர் ரஜினிகாந்தின் அதிரடி அறிவிப்பு !

நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவேன் என்று கூறி வந்தார் மேலும் 2020, டிச. 31 அன்று தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவதாக கூறினார்.

இந்த கொரோனா தொற்று இருக்கும் காலகட்டத்தில் சமீபத்தில் அமெரிக்கா சென்று மருத்துவப் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார்.

மேலும் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து கேள்வி நிலவும் நிலையில், மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் அதுகுறித்து ஆலோசிக்க உள்ளேன் என்று தெரிவித்தார்.தற்போது,அவர் அறிக்கை ஒன்றை வெளியீட்டுள்ளார்.

அதில் அவர் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.மக்கள் நலப் பணிக்காக முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.