Rain Update: தமிழகத்தில் இன்று14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு எச்சரிக்கை

Rain Update: தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக நேற்று தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. அத்துடன் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த அறிக்கையில் , தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்றும் நாளை தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை,கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, நாகை,திருப்பத்தூர்,கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, சேலம் ஆகிய 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வருகிற 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் கன்னியாகுமரி ,திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Inflation: பாராசிட்டமால் உட்பட 800 மருந்துகளின் விலை உயர்கிறது