ஜல்லிக்கட்டு போட்டியை காண தலைவர்கள் வருகை !

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். கரோனா தொற்று காரணமாக போட்டிகள் கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட இருக்கிறது.

ஜனவரி 16 ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

இந்நிலையில், வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் நாளன்று அவனியாபுரத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியைக் காண காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவும் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.