ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது மேலும் அதனை மீட்க பணிகள் நடைபெற்று வருவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
தற்போது சமூக வலைத்தளங்களும் மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு வந்துவிட்டது.டெல்லியில் 9வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். மேலும் ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இது சட்டப்படி குற்றமாகும்.சில மணி நேரங்களில் அந்த பதிவை நீக்கிவிட்டார்.எனினும் ராகுல் காந்தியின் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.சர்ச்சைக்குரிய பதிவுகள் பதிவிட்டால் 24 மணிநேரத்துக்கு அவரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்படும்.ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. மறுசீரமைப்புக்குப்பின் மீண்டும் செயல்படும் என்று தெரியவந்துள்ளது.