ரபேல் விமானத்தை பெண் விமானி இயக்குவார் என தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது மிக்21 போர் விமானங்களை இயக்கும் பெண் விமானி உரிய சோதனைக்கு பிறகுதான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.
விமானப்படையில் 10 பெண் விமானிகள் உள்ளனர். அம்பாலவை தலைமையிடமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கோல்டன் அரோஸ் அணியில் ரஃபேல் விமானங்கள் கடந்த 10ஆம் தேதி இணைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.