புதுவையில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியுள்ள நிலையில், அம்மாநிலத்தில் உள்ள சில வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் சரியாக செயல்படவில்லை.
புதுச்சேரி மாநிலம் ராஜ்பவன் தொகுதி வைத்திக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 21 ஆவது வாக்குச்சாவடியில் வாக்கு பதிவு இயந்திரம் பழுதானது. அதனை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி குண்டுப்பாளயம் பகுதியில் உள்ள 9/4a வாக்குச்சாடியில் மின்னணு வாக்குபதிவு இயந்திரம் செயல்படவில்லை இதனால் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக நீண்டநேரம் காத்திருக்கின்றனர்.