மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி !

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு பதிவில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியப் பிரதமர் ஒரு கோழை போல் நடந்து கொண்டார். அவர் நம் நாட்டை வீழ்த்தியுள்ளார் என்று பிரியங்கா காந்தி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.மேலும் பிரதமர் நரேந்திர மோடி தனது கடமையிலிருந்து பின்வாங்கி விட்டார். மோசமான காலம் கடக்கும் வரை அவர் காத்திருந்தார்.

பிரதமருக்கு இந்தியர்கள் பற்றிய நினைவு முதலில் வருவதில்லை. அரசியல் பற்றிய நினைவுதான் முதலில் வருகிறது.மேலும் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து முதலில் இந்திய உயிர்களுக்கான ஏற்பாடுகளை உறுதி செய்யாமல் மில்லியன் கணக்கான உயிர் காக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்ததாகக் சாடியுள்ளார்..

தற்போது கொரோனா இருக்கும் கடுமையான சூழலில் பிரியங்கா காந்தி யார் பொறுப்பு? என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.