தனியார் பள்ளிகள் அரசிடம் கோரிக்கை !

கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக பள்ளிகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டு மாணவர்களின் நலன் கருதி பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தன.

மேலும் பள்ளிகளை திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது.கர்நாடகா,பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன.மேலும் தமிழகத்திலும் செப் 1 முதல் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

மேலும் நவம்பர் ஒன்று முதல் நேரடி வகுப்புகள் மற்ற வகுப்புகளுக்கு தொடங்கலாம் என்று அரசு அறிவித்தது.

தற்போது 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்த பிறகு 1 முதல் 5 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தனியார் பள்ளிகள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.

இதையும் படிங்க : தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை !