தனியார் கல்லூரிகள் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் !

கொரோனா பரவல் இருப்பதால் மாணவர்கள் நலன் கருதி ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த அரசு அறிவித்துள்ளது.உயர் நீதிமன்ற உத்தரவின்படி 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

மேலும் அதிக கட்டணம் வசூல் செய்வது குறித்து கல்லூரி மீது புகார் அளிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது கொரோனா தொற்று இருக்கும் காரணத்தினால் மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக இணைய வழி தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.