இன்று மாலை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

கடந்த சில வாரங்களாகவே மாநில முதல்வர்களுடன் கோவிட் தடுப்பு பணிகள் குறித்தும் தடுப்பூசிகள் செலுத்தக் கூடிய பணிகள் குறித்தும் பல்வேறு கட்டமாக ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருப்பதாக தெரிகிறது.

இதுமட்டுமின்றி கோவிட் முதல் அலை பாதிப்பின்போது ரூ.20 லட்சம் கோடிக்கான சுயசார்பு திட்டத்தை பிரதமர் அறிவித்திருந்தார். 2-வது அலை ஏற்பட்டதற்கு பிறகு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதத்தில் அதுதொடர்பான சில அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது