மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் பிரதமர்

சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்தார். வழக்கமாக இல்லாத அளவுக்கு அவருக்கு அதிக அளவில் சாலையில் திரண்டு தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். விழாவில் கலந்துகொண்ட துணை முதல்வர் மோடி பட்டுச்சட்டையில் வந்திருந்தார்.

நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தபின் பிரதமர் மோடி பேசினார். அப்போது ரூ.2,640 கோடி செலவில் கல்லணை வாய்க்காலைப் புதுப்பித்து, நவீனப்படுத்தி, விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் குறித்து பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்.

எங்கே மக்கள் வறுமையின்றி மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ, அந்த அரசே சிறப்பான அரசாங்கமாக விளங்கும். அப்படி சிறந்த அரசை ஆளும் மன்னன் மிக உயர்ந்தவனாக போற்றப்பட்டும் மிகுந்த நற்பெயர் பெறுவான் என்ற பொருளில் ஒளவையார் எழுதிய பாடலை சரியான நேரத்தில் மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி, அடுத்து பாரதியார் கவிதையையும் மேற்கோள் காட்டினார்.