சென்னை வந்தார் குடியரசுத் தலைவர்

நாளை மாலை சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் திருவுருவப்பட திறப்பு விழா நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இன்று தமிழகம் வந்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 12.45 மணிக்கு சென்னை வந்த அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

மாலை நாலரை மணி அளவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை செல்லும் குடியரசுத் தலைவர் அங்கு நடைபெற உள்ள சென்னை மாகாண சட்டசபை உருவாகியதன் நூறாம் ஆண்டு விழாவில் கலந்து கொள்கிறார்.