நடிகை ஷில்பா ஷெட்டியிடமும் காவலர்கள் விசாரணை..!

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை ஆபாச படங்கள் தயாரித்த வழக்கில் மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெண் ஒருவர் புகார் கொடுத்ததன் பெயரில், அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆபாச பட பதிவேற்றம் விவகாரம் தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டியிடமும் காவலர்கள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.