மத்திய அரசு என்று தான் அழைப்போம் !

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற்ற தேர்தலில் திமுக கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றார்.முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்துள்ளார்.

மத்திய அரசை ஒன்றிய அரசு ஒன்று அழைப்பதை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.இதற்கு பல்வேறு காட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில், பாமக நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி பேசியது,எங்களைப் பொறுத்தவரையில் மத்திய அரசு என்றுதான் நாங்கள் அழைப்போம். பெயரை மாற்றி அழைப்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக தெரிவித்தது.ஆனால் விலை குறைக்கப்படவில்லை என்று கூறினார்.