கல்வியாளர்களுடன் பிரதமர் மோடி உரை..!

ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி செப்., 7ம் தேதி கலந்துரையாடுகிறார்.மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ‘சிக்ஷா பர்வ்’ எனப்படும் கல்வி விழா செப்., 5 – 17ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

முதல் நாள் நிகழ்ச்சியில் தேசிய விருது பெற்ற
44 ஆசிரியர்களுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விருதுகளை வழங்குகிறார்.செப்., 7ல் டில்லியில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

அப்போது சைகை மொழி அகராதி, ஒலி புத்தகங்கள், சி.பி.எஸ்.இ., பள்ளி தர மதிப்பீடு மற்றும் அங்கீகார கட்டமைப்பு ஆகியவற்றை அவர் வெளியிடுகிறார்.

ஆசிரியருக்கான பயிற்சி திட்டம், தன்னார்வலர்களுக்கான வித்யாஞ்சலி இணையதளம் ஆகியவற்றை துவக்கி வைக்கிறார். இதன்பின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடுகிறார்.