நீடிக்கும் விவசாயிகளின் போராட்டம் !

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று 25வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த சட்டத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. விவசாயிகளின் போராட்டத்தில் பஞ்சாப் சீக்கிய விவசாயிகளே பெரும்பான்மையினராக உள்ளனர்.இந்நிலையில்,பிரதமர் மோடி இன்று காலையில் திடீரென டெல்லியில் உள்ள சீக்கியர்களின் வழிபாட்டு தலமான குருத்வாரா சென்று சீக்கியர்களை போல் தலைப்பாகை அணிந்து கொண்டு, வழிபாடு நடத்தினார்.