Ganga expressway: ஷாஜகான்பூரில் ரூ.36,200 கோடி செலவில கங்கா விரைவுச்சாலை

Ganga Expressway
Ganga Expressway

Ganga expressway: உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் ரூ.36,200 கோடி செலவில், 594 கிலோ மீட்டர் தொலைவிற்கு கங்கா விரைவுச்சாலை அமைக்கப்படவுள்ளது.

இந்த விரைவுச்சாலை அமைக்கும் பணியை வரும் 18-ம் தேதி (நாளை மறுநாள்) பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கவுள்ளார். இந்த விரைவுச்சாலையில் இந்திய விமானப்படை விமானங்கள் அவசரமாக பறப்பதற்கும், தரை இறங்குவதற்கும் ஏதுவான வகையில் சுமார் 3.5 கிலோ மீட்டர் தொலைவில் விமான ஓடுதளம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமையன்று (செப்டெம்பர் 2), உத்தரப்பிரதேச அமைச்சரவை ரூ .36,230-கோடி மதிப்பிலான, 594-கிமீ கங்கா விரைவுச்சாலை (Ganga ExpressWay) அமைப்பதற்கு ஒப்புதல் அளித்தது. இது நாட்டின் மிக நீளமான சாலை இணைப்பாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தலைமையின் கீழ், மாநில அமைச்சரவை ஆறு வழிச்சாலை விரைவு நெடுஞ்சாலை அமைக்க வழி வகுக்கும் திட்டத்தின் நான்கு தொகுப்புகளின் முன்மொழிவு கோரிக்கை (RFP) மற்றும் மேற்கோள் கோரிக்கை (RFQ) ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளித்தது.

கங்கை ஆற்றின் வழியே உள்ள மீரட், ஹபூர், புலந்த்ஷஹர், அம்ரோஹா, சம்பால், படாவ்ன், ஷாஜகான்பூர், ஹர்தோய், உன்னாவ், ரேபரேலி, பிரதாப்கர் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மீரட் மற்றும் பிரயாக்ராஜ் இடையேயான இந்த விரைவு சாலை திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தீவிர (mission) முறையில் பணியாற்றுமாறு உபி எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் (UPEIDA) உட்பட அனைத்து தொடர்புடைய துறைகளுக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Bhringraj Oil :முடி கருமையாக செழித்து வளர உதவும் கரிசலாங்கண்ணி !

Bhringraj Oil: தலைமுடி அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணி இலைகளை தொடர்ந்து தடவிவர முடி கருமையாக செழித்து வளரும், முடி உதிர்தலும் கட்டுப்படும்.

கீரையை சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தை பெறும்.

பெண்களுக்கு கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங்கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும் நரையும் மாறும்.

இப்படிப்பட்ட கரிசலாங்கண்ணி எண்ணெயை கிராம புறங்களில் பலர் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கரிசலாங்கண்ணி எண்ணெயை வாங்க விரும்பினால் 9791886213 என்ற நம்பருக்கு போன் அல்லது வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க: Vanniyar quota: வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து