பிரதமர் மோடி மற்றும் போப் ஆண்டவர் சந்திப்பு !

பிரதமர் நரேந்திர மோடி வாடிகன் நகரத்தின் தலைவருடனான தனது முதல் சந்திப்பில், போப் பிரான்சிஸை வத்திக்கானில் இன்று சந்தித்தார்

இந்த சந்திப்புக்குப் பிறகு, மோடி ட்விட்டரில், போப்பைத் தழுவிய புகைப்படங்களுடன், “போப் பிரான்சிஸுடன் மிகவும் அன்பான சந்திப்பை மேற்கொண்டேன். அவருடன் பலதரப்பட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, மேலும் அவரை இந்தியாவுக்கு வருமாறும் அழைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்கள் சமூகம் மற்றும் அதன் நிறுவனங்கள் மீதான துன்புறுத்தல் மற்றும் தாக்குதல்கள் குறித்து புகார் தெரிவித்து வரும் நேரத்தில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.