வாக்காளர் பட்டியல் 1-ம் தேதி வெளியீடு !

கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 1-ம் தேதி வெளியிடப்படவுள்ளது. பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 1-ம் தேதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் வெளியிடுகிறார்.

வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி 18 வயது பூர்த்தியடையும் நபர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம். அதேபோல், வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றம், பெயர் நீக்கம் ஆகியவற்றுக்கும் விண்ணப்பங்களை அளிக்கலாம்.