காரைக்காலில் ஜிப்மர் கிளை மருத்துவமனை

காரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை புதுவைக்கு வந்தார். காலை 11.20 மணியளவில் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு ராணுவ ஹெலிகாப்டரில் வந்த பிரதமரை கவர்னர் தமிழிசை, மத்திய மந்திரி, பா.ஜனதா கட்சியினர், கூட்டணி கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் கார் மூலம் ஜிப்மர் கலையரங்கத்துக்கு பிரதமர் வந்தார்.

அவரை ஜிப்மர் இயக்குனர், அதிகாரிகள் வரவேற்றனர். அங்கு நடந்த அரசு விழாவுக்கு பிரதமர் மோடி தலைமை வகித்தார். கவர்னர் தமிழிசை, பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அர்ஜூன்ராம் மெக்வால், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன், செல்வ ராஜ், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அங்கு காணொலி காட்சி வழியாக விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையில் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கும் 4 வழிப்பாதை, சீர்காழி சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான 56 கி.மீ. சாலை பணி, காரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்