அனைத்து மாநிலங்களின் காவல்துறை இயக்குநர்கள், மத்திய ஆயுதப் படைகளின் இயக்குநர்கள் கலந்துகொள்ளும் 56வது மாநாடு லக்னோவில் அமைந்துள்ள உத்தரப்பிரதேச காவல்துறை தலைமையகத்தில் நவம்பர் 20, 21ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில், இணைய குற்றங்கள், பயங்கரவாத தாக்குதல், போதைப் பொருள் கடத்தல், சிறைத்துறை சீர்திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கபடவுள்ளன.
இந்நிலையில், லக்னோ காவல்துறை தலைமையகத்தில் இன்று நடைபெற உள்ள 56வது டிஜிபி-க்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் டிஜிபி-க்கள் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்
மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி காவல்துறை இயக்குநர்களுடன் ஆலோசனையில் ஈடுபடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



