பிளஸ்-2 தேர்வு குறித்து இன்று மாலை முடிவு

பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 3-ந் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2-ந் தேதி நடைபெற இருப்பதால் அதற்கு மறுநாள் நடக்க இருந்த பிளஸ்-2 தமிழ் தேர்வை மட்டும் வேறொரு நாளுக்கு அரசு தள்ளி வைத்தது.

இதைத் தொடர்ந்து மே 5-ந் தேதி ஆங்கிலப் பாடத்துடன் பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. கொரோனா தொற்று காரணமாக பிளஸ்-2 தேர்வு தள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ் தேர்வை மட்டும் ஒத்தி வைத்து மற்ற தேர்வுகள் அறிவிக்கப்பட்டப்படி நடைபெறும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் அடுத்த மாதம் 4-ந் தேதி முதல் நடைபெறுவதாக இருந்த சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை மத்திய கல்வித்துறை ஒத்தி வைத்துள்ளது