தமிழக அரசின் பெட்ரோல் விலை குறைப்பு மக்களுக்கு பயன் அளிக்கும் – அண்ணாமலை

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர பாஜக தயார்.. மாநில அரசு தயாரா? என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறும்போது, திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகின்றன.

எந்த ஒரு ஆட்சிக்கும் 6 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும். இந்த ஆட்சியில் தலைமைச் செயலர், டிஜிபி மற்றும் மாவட்ட அளவில் நல்ல ஆட்சியாளர்களைப் பொறுப்புகளில் நியமித்துள்ளனர். அதிகாரிகள் திறம்பட வேலை செய்கின்றனர்.

தமிழக அரசின் பெட்ரோல் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு மக்களுக்கு பயன் அளிக்கும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர பாஜக தயாராக உள்ளது. மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சராக தர்மேந்திர பிரதான் இருந்தபோது இதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.