கரோனா கால விதிகளை மீறுவோருக்கு அபராதம் – சென்னை மாநகராட்சி !

கரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கிய நிலையில் தமிழக அரசு கரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிய விதிகளை விதித்துள்ளது.தற்போது,கரோனாவின் தாக்கம் சென்னையில் அதிகரித்து வருகிறது.

சென்னை மாநகராட்சி முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதமும், பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும் சமூக இடவெளி, அரசின் கரோனா கால விதிகளை மீறும் நிறுவனங்கள், கடைகள், ஜிம், ஸ்பா, சலூன்களுக்கு ரூ.5000 வரை அபராதம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தினசரி கரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை, தினமும் 4500-ஐ நோக்கி உயர்ந்து வருகிறது.இந்த நிலையில் விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற அரசு மக்களுக்கு அறிவுறுத்திவருகிறது.