223 பேருக்கு கரோனா தொற்று – புதுவை !

புதுச்சேரி மாநிலத்திலும் கரோனா தொற்று பரவி வருகிறது.புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் வெளியிட்டுள்ள தகவல்,புதுச்சேரி மாநிலத்தில் 3,751 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், புதுச்சேரியில் 158 பேருக்கும், காரைக்காலில் 46 பேருக்கும், ஏனாமில் 10 பேருக்கும், மாஹேவில் 9 பேருக்கும் என மொத்தம் 223 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 43 ஆயிரத்து 465 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் 534 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,550 பேரும் என மொத்தம் 2,084 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று தெரிவித்தார்.