ஐந்து ஆண்டுகள் கடந்தும் மின்சாரவசதி, தண்ணீர் வசதி இல்லாத கிராம சேவை மையம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் வெள்ளக்குட்டை ஊராட்சி ஜெ.ஜெ.நகர் பகுதியில் கடந்த 2014-2015ம்ஆண்டு மகாத்ம காந்தி தேசியவேலை உறுதிதிட்டத்தில் ரூபாய் 13.12லட்சத்தில் கிராம சேவை மையம் கட்டடம் அரசால் கட்டப்பட்டது.

இந்த கட்டடத்திற்கு மின்சாரவசதி மற்றும் தண்ணீர் வசதி இல்லை.மக்கள் வரிபணத்தில் கட்டப்பட்ட கட்டிடம் 5ஆண்டுகள் ஆகியும் இதுவரை மக்கள் பயண்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை.அரசு உரிய நடவடிக்கை எடுத்து மக்கள் பயண்பாட்டிற்கு கொண்டுவந்து திறப்புவிழா காண நடவடிக்கை எடுக்கவேண்டுமென கிருஷ்ணகிரி மாவட்ட பத்து ரூபாய் இயக்கம் கோரிக்கை வைக்கிறது.