பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க அவகாசம் நீட்டிப்பு !

பான்-ஆதார் இணைக்கும் காலக்கெடு மீண்டும் அரசாங்கத்தால் நீட்டிக்கப்பட்டுள்ளது.பான்-ஆதார் இணைக்கும் காலக்கெடு ஒன்றிய அரசு ஏற்கனவே மூன்று முறை நீட்டித்துள்ளது.

முதலில் 2020 மார்ச் 31 முதல் 2020 ஜூன் 30 வரை, பின்னர் மார்ச் 31, 2021 வரை, பின்னர் மீண்டும் ஜூன் 30, 2021 வரை.மற்றும் ஜூலை 1-ந் தேதிக்கு பிறகும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதலாக 3 மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் கால அவகாசம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.