தமிழக ரேஷன் கடைகளில் வருகிறது பனைவெல்லம் !

தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு அறிவித்துவருகிறது.தற்போது தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பனைவெல்லம் விற்பனை செய்வதற்கான அரசாணை அரசு அறிவித்துள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதரர்களுக்கு உணவு பொருட்கள் அளிக்கப்பட்டுவருகிறது.இதில் நிறைய ஏழை எளிய மக்கள் பயன்பெறுகிறார்கள்.

மேலும் இந்த பொருட்கள் அனைத்தும் மக்கள் நலன் கருதி குறைந்த விலையில் அளிக்கப்படுகிறது.தற்போது தமிழகத்தில் குறிப்பிட்ட நியாய விலை கடைகளில், அமுதம் அங்காடிகளில் பனைவெல்லம் விற்கப்படும். ஒரு அட்டைக்கு 100 கிராம் முதல் 1 கிலோ வரை பனைவெல்லம் வழங்கப்படும்.

மேலும் மக்களை பனை வெல்லத்தை மாதந்தோறும் வாங்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் கட்டாயப்படுத்த கூடாது என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : வருகின்ற 4ஆம் தேதி எஸ்.பி.பியின் கடைசி பாடல் வெளியிடு