தமிழகத்தைச் சேர்ந்த 11 பேருக்கு பத்ம விருதுகள்

எஸ்.பி.பாலசுப்ரமணியம், சாலமன் பாப்பையா, ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட 11 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மூதாட்டி பாப்பம்மாள்(104) இந்த வயதிலும் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது அறிவித்து கெளரவித்துள்ளது.

பத்ம பூஷன் விருது மறைந்த அசாம் மாநில முதல்வர் தருண் கோகாய், மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட 10 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ம ஸ்ரீ விருது தமிழகத்தைச் சேர்ந்த சாலமன் பாப்பையா, அனிதா, சுப்பு ஆறுமுகம், ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட 102 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் பத்ம விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.