அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று மாலை ஆலோசனை கூட்டம்..!

Highway Tender Scam Chennai High court Reject Edappadi Palaniswami case Tamil Nadu

வருகிற 8-ந்தேதி சசிகலா சென்னை வர உள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு தொலைபேசி வாயிலாக அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி அனைத்து மாவட்ட செயலாளர்களும் அவசரம் அவசரமாக சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகி யோர் பங்கேற்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.

இந்த கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் மற்றும் அமைப்பு செயலாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.