நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஜூலை 31 க்குள் அமல் படுத்த உத்தரவு !

இந்தியா முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மாநிலங்கள் தோறும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதன் மூலம் எந்த பகுதியிலும் உணவு பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த திட்டம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரிதும் உதவும் என மத்திய அரசு விளக்கியுள்ளது. தங்களின் சொந்த மாநிலங்களில் என்ன பெறமுடியுமோ, அவற்றை வெளிமாநில ரேஷன் கடைகளில் இருந்தும் பெற முடியும் என்பதாகும்.

.இதனால் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள், ஜூலை 31-ம் தேதிகுள் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். இந்த திட்டம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கானதால், அனைத்து மாநில அரசுகளும் இதை விரைந்து அமல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.