கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் பெட்ரோல் இலவசம்

திருவண்ணாமலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

தனியார் ஓட்டுனர் பயிற்சி அசோசியேசன் சார்பில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தலா 1 லிட்டர் பெட்ரோல், அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் மற்றும் பிஸ்கெட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த முகாமை நேரில் ஆய்வு செய்த கலெக்டர் முருகேஷ் பெட்ரோல் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளி அசோசியேசன் நிர்வாகிகளை பாராட்டினார்.

பெட்ரோல் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், இலவச பெட்ரோல் அறிவிப்பால் பலர் முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தெரிகிறது.

இதையும் படிங்க: நடிகை ரம்யா கிருஷ்ணன் பிறந்தநாள்..!