நானாக முன்வந்து ராஜினாமா செய்திருக்கிறேன்- எடியூரப்பா

பாஜக வளர்ச்சிக்கு மட்டுமே வேலை செய்வேன், ஆளுநர் உட்பட எந்த பதவியையும் நான் கேட்க வில்லை என எடியூரப்பா கூறியுள்ளார்.

மேலும் டெல்லி தலைமை எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. நானாக முன்வந்து ராஜினாமா செய்திருக்கிறேன். மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே பதவி விலகினேன். கர்நாடகாவில் மீண்டும் பாஜக பதவிக்கு வரவேண்டும் கட்சி வளர்ச்சி பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன்.அடுத்த தேர்தலிலும் பாஜக வெற்றி பெற உழைப்பேன். அடுத்த முதல்வர் யார் என நான் யாரையும் பரிந்துரைக்க மாட்டேன்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதே மத்திய அமைச்சர் வாய்ப்பு கிடைத்தது ஆனாலும் நான் போகவில்லை. இனிவரும் காலங்களில் ஆளுநர் ஆகும் திட்டமும் இல்லை. கடைசி வரை கட்சி வளர்சிக்காக உழைப்பேன். கட்சி வளர்சிக்கு மட்டுமே வேலை செய்வேன் ஆளுநர் உட்பட எந்த பதவியையும் நான் கேட்க வில்லை.” என்றார்.