அரசு பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன.இந்த வருடம் கொரோனா கட்டுக்குள் வராததால் நடப்பு ஆண்டும் இதே முறை தொடரும் என்று அறிவிக்கப்பட்டன.

தற்போது தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த 14 ஆம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது.இந்த கொரோனா தொற்று வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளதால், தமிழகப் பள்ளிக் கல்வித்துறை மாணவர் சேர்க்கைக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது.