நடிகை சாந்தினி கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது !

நடிகை சாந்தினி, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளித்திருந்தார்.அதில் அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்தபின் தன்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டார் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் தனது அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் கூறினார். மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

மேலும் சாந்தினியை தனக்கு யாரென்றே தெரியாது என மணிகண்டன் தெரிவித்திருந்தார்.

தலைமறைவான மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.இந்நிலையில் பெங்களூரில் இருந்த மணிகண்டனை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.