பிரதமர் பதவிக்கு நிதிஷ்குமார் பொருத்தமானவர்

ஐக்கிய ஜனதாதள எம்.பி.க்கள் குழு தலைவர் உபேந்திர குஷ்வாகா, நிதிஷ்குமார் பிரதமர் பதவிக்கு ஏற்றவர் என்று சமீபத்தில் கூறியிருந்தார்.

அதற்கு மாநில பா.ஜனதா தலைவர்கள், பிரதமர் ஆவதற்கு 273 எம்.பி.க்கள் ஆதரவு வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

இந்தநிலையில், உபேந்திர குஷ்வாகாவிடம் நேற்று இதுகுறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-

பெரும்பான்மையை ஏன் திரட்ட முடியாது? நாங்கள் தற்போது பிரதமர் பதவியை கோரவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறோம். பிரதமர் மோடியின் தலைமையை ஏற்றுக்கொண்டுள்ளோம்.

ஆனால், எதிர்காலத்தில் நடப்பதை பற்றி யூகத்துடன் பேசுவதாக இருந்தால், அது நடக்காது, இது நடக்காது என்று எதையும் நிராகரிக்க முடியாது.

நிதிஷ்குமார் பிரதமர் ஆகும் சூழ்நிலை வந்தால், பெரும்பான்மையை திரட்டுவது ஒரு பிரச்சினையாக இருக்காது.